தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில்... தப்பித்தவறி கூட ஓபனாக சிறுநீர் கழிக்காதீங்க.. ஒரே அசிங்கமாக போகும்
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்துக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தஞ்சாவூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது இந்நிலையில் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க கேமராவுடன் கூடிய ஒலி எழுப்பும் கருவி தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். சைரன் போன்ற சத்தத்துடன் விளக்குகள் எரிந்து காட்டிக்கொடுக்கும்..
டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நகர் என்றால் அது தஞ்சாவூர் தான். புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, காரைக்கால் என பல பகுதி மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் இருக்கிறது. 2004ம் ஆண்டு காலக்கட்டத்தில் எல்லாம் புறநகர் பகுதி என்கிற அளவில் தான் தஞ்சை புதிய பேருந்து நிலையம் இருந்தது. இப்போது அப்படி இல்லை.. மிகப்பெரிய அளவில் அந்த பகுதியும் வளர்ந்துவிட்டது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பயணிகள் நடமாட்டத்துடன் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம். இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தான் ஆம்னி பஸ் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை, குளியலறை வசதிகள் இருக்கின்றன.
அரசு பேருந்துகள் செல்லும் பகுதியை பொறுத்தவரை மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகில் மட்டும் இலவச கழிவறை செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் இலவச கழிவறைகள் இல்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பொதுவெளியில் ஆட்கள் சிறுநீர் கழிப்பது அதிகரித்தது. இதை தடுக்க பல முயற்சிகள் மாநகராட்சி தரப்பில் செய்யப்பட்டன. ஆனாலும் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுவது தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தஞ்சாவூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக முதல்கட்டமாக பஸ் நிலையத்தில் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கருவியை பொருத்தி இருக்கிறது. திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவுடன் இந்த சென்சார் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த கேமரா மற்றும் சென்சார் கருவி எப்படி வேலை செய்யும் என்றால், 50 அடி தூரத்திற்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் கண்டுவிடும். யாராவது சிறுநீர் கழிக்கும் நோக்கத்தில் இந்த கோடு அருகே வந்தால் அலாரம் ஒலிக்க தொடங்கி விடும். சைரன் போன்ற சத்தத்துடன் விளக்குகளும் எரியத்தொடங்கும். இதற்காக இரும்பு தகரத்தில் இரவு நேரத்தில் சைரன் போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரும்பு தகரத்தில் இருந்து சில அடி தூரத்தில் கோடும் வரையப்பட்டுள்ளது.
சிறுநீர் கழிப்பதை தடுக்கவே இந்த அலாரம் ஒலிக்கும் என்பதால் யாரும் சிறுநீர் கழிக்க விரும்பமாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. யாராவது சிறுநீர் கழித்தால் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். 5 வினாடிகள் முதல் 10 வினாடிகள் வரை இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார்கள்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications