இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தஞ்சை: தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குச் சாதிய பாகுபாடு இங்கே அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவைச் சாட்டி மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை இன்னும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், கோயிலுக்கு அனுமதிக்க மறுப்பது, குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகளைக் கலைப்பது போன்ற கொடுமைகள் நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருக்கிறது என்றும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிலவுவதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஆளுநர் பேசுவதை ஏற்க முடியாது என்று திமுக பேச்சாளர் சரவணன் இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.












Click it and Unblock the Notifications