சென்னையை ஓவர் டேக் பண்ணுது.. தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் அதிவேகமாக வளருது.. இது லிஸ்ட்லயே இல்லையே
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் வேகமாக வளர தொடங்கி உள்ளது. சுத்தமான சாலைகள், சாலை ஓரம் நடக்க முறையான பாதைகள் என்று நம்பிக்கை அளிக்கும் தஞ்சை தற்போது ஐடி துறையிலும் அசத்த உள்ளது. ஏற்கனவே இங்கே மால் அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐடி பார்க்கும் அமைக்கப்படுகிறது. ஐடி பார்க்குகள் என்றால் சென்னை, கோவை என்று மட்டும் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறி வேறு வேறு மாவட்டங்களுக்கு ஐடி பார்க்குகள் செல்ல தொடங்கி உள்ளன.
அந்த வகையில், தஞ்சாவூரில் டைடல் நியோ ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. இங்கே கட்டப்பட்டு வரும் பார்க்கின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கே வேகமாக ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. அசுர வேகத்தில் இதன் கட்டுமானம் நடந்து முடிந்துவிட்டது. அடுத்த மாதமே இந்த ஐடி பார்க் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே லாங்வல் என்ற மால் வரும் நிலையில் தற்போது ஐடி பார்க்கும் அமைக்கப்பட உள்ளது.

மன்னார்குடி எம்எல்ஏ மற்றும் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டெல்டாவிற்கு ஐடி துறையை கொண்டு வர வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்ததன் விளைவாக இந்த டைடல் பார்க் தஞ்சாவூருக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய தொழில்துறை அமைச்சராக அமைச்சர் டிஆர்பி ராஜா பதவி வகித்து வருகிறார். தமிழ்நாட்டின் இளமையான அமைச்சர்களில் இவரும் ஒருவர். தற்போது சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் இவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
தொழில்துறை அமைச்சரான இவர் தற்போது தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் கூட தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்தது. தமிழ்நாட்டில் கூகுள் தொடங்கி ஈவி தொழிற்சாலைகள், புதிய ஐடி பார்க்குகள், கார் தொழிற்சாலைகள் குவிந்து வருகின்றன. கர்நாடகாவிலும் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றன. அதேபோல் முதலீட்டாளர்கள் மாநாடும் இன்று நடக்க உள்ளது.
அதிரடி வறிவிப்புகள்: பல சுவாரசியமான.. அதிரடி அறிவிப்புகள்.. ஒப்பந்தங்கள் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளன. வின்பாஸ்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாடு வரும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கொண்டு செல்ல அமைச்சர் டிஆர்பி ராஜா தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக தற்போது தஞ்சாவூரில் ஐடி பார்க் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தஞ்சைக்கும் ஐடி துறை வரும் வகையில்.. டெல்டா மக்கள் சென்னைக்கு வேலைக்கு செல்லாமல்.. எளிதாக 1- 2 மணி நேர பயணத்தில் ஐடி பணிகளை செய்ய வசதியாக இந்த நியோ டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. இந்த பார்க் கட்டப்பட்டால் மன்னார்குடியில் இருந்து 1 மணி நேரத்தில் ஐடி பார்க் வேலைக்கு செல்ல முடியும். மன்னை எக்ஸ்பிரஸில் 10 மணி நேரம் பயணித்து சென்னை செல்ல வேண்டியது இல்லை.
பணிகள் வேகம்: இதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா - முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர். அதில், சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் டிஆர்பி ராஜா இந்த பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.
கட்டுமானம்: இந்த நிலையில்தான் தற்போது தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் டைடல் நியோ ஐடி பார்க்கிங் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கே வேகமாக ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. மிக வேகமாக இங்கே கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கே கட்டுமானம் மேலவஸ்தச்சாவடி ஜங்சன் பகுதியில் வந்துள்ளது. இந்த கட்டுமானம் வேகமாக வளர்ந்து வருவது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஓசூர், கோவை, தஞ்சை, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 10 புதிய தகவல் தொழில்நுட்ப (தகவல் தொழில்நுட்ப) பூங்காக்கள் அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போதைய நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க் தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம்கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications