முஸ்தபா.. முஸ்தபா.. மாநகராட்சி ஆணையர் பணி மாறுதல்! கண்கலங்கி அழுத தஞ்சை மேயர்! அரசியல் ஆபூர்வம்!
தஞ்சை: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கரூருக்கு பணிமாறுதல் பெற்று செல்லவுள்ள நிலையில் அவருக்கு நடந்த ஃபேர்வெல் விழாவில் கண்கலங்கி அழுதபடி பிரியாவிடை கொடுத்து அனுப்பியுள்ளார் தஞ்சை மேயர் சன்.ராமநாதன்.
இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா. பொதுவாக ஒரு ஸ்டிரிக்டான அதிகாரி இடம் மாறுதல் பெற்றுச் செல்கிறார் என்றால் அங்கிருக்கும் லோக்கல் அரசியல்வாதிகள் அப்பாடா தொலைந்தது சனியன் என்று தான் நினைத்து கொண்டாடுவார்கள். ஆனால் தஞ்சையில் நிகழ்ந்திருப்பதோ, அதிகாரிக்காக அரசியல்வாதி அழுதிருப்பது. இதனை தமிழக அரசியலின் ஆபூர்வ நிகழ்வு என்றே கூறலாம்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாரை பொறுத்தவரை ரொம்ப ஸ்டிரிக்டான அதிகாரி என்ற பெயர் எடுத்தவர். ஒப்பந்தப்பணிகள் உட்பட மாநகராட்சி கடை வாடகை வரை மிகவும் கறாராக இருந்தவர். அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவர். இப்படிப்பட்ட ஒரு அதிகாரி வேரு ஊருக்கு செல்கிறார் என்றால் அந்த ஊரைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் கொண்டாடுவது தான் வழக்கம்.
ஆனால் தஞ்சையில் நடந்திருப்பதோ அதற்கு நேர் மாறானதாக இருந்தது. இதிலிருந்தே எந்தளவுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை தஞ்சை மேயர் சன்.ராமநாதன் கொடுத்திருக்கிறார் என்பது புரிய வருகிறது. இதனிடையே இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பு தகவல் என்னவென்றால் தமிழ்நாட்டிலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாற்றிய பெருமையும் ஆணையர் சரவணக்குமாருக்கு உண்டு.
அண்மையில் கூட தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.27 கோடியை மாநகராட்சி பெயரில் வைப்பு நிதியாக செலுத்தியிருக்கிறார் சரவணக்குமார். தஞ்சையை போலவே கரூர் மாநகராட்சியிலும் சரவணக்குமார் இன்னும் பல அதிரடிகளை அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இதுவரை பள்ளிக்கூடங்களில் இருந்து இடம் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை தான் மானவர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருப்பதை பார்த்திருப்போம். முதல் முறையாக கறார் அதிகாரி ஒருவருக்கு அரசியல்வாதியான தஞ்சை மேயர் பிரியாவிடை கொடுத்து கண்கலங்கிய படி வழியனுப்பி வைத்ததை இப்போது தான் பார்க்கிறோம்.
மாநகராட்சி ஆனையராக சரவணக்குமார் தஞ்சையில் 2 ஆண்டுகள் 2 மாதம் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications