அடுத்தடுத்து விவசாயிகள் மரணம்.. தீராத சோகத்தில் தஞ்சை!
தஞ்சை: அடுத்தடுத்து ஏற்படும் விவசாயிகளின் மரணம் ஒட்டுமொத்த டெல்டாவாசிகளையும் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.
கஜா புயலின் கோர தாண்டவத்தில், பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் இருந்து மீளாத, விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளனர். பல விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் இருந்து மரங்களை அகற்றி வருகின்றனர்.
ஆனாலும் விவசாயிகள் சிலர் மனம் வெம்பி தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர ராஜன் என்ற விவசாயி, மனம் வெதும்பி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
வன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி 52, வாழ்வாதாரமாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் புயலில் நாசமானதால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்டார். இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
இந்நிலையில் இன்று காலை, ஒரத்தைநாடை அடுத்த திருமங்கலக்கோட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் விழுந்த தென்னை மரத்தை அகற்றும்போது பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது தென்னை சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல, மன்னார்குடி அடுத்துள்ள எடமேலையூரில் புயலில் சம்பா பயிர் சேதமடைந்த சோகத்தில் விவசாயி செல்வராஜ், 55 என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஏற்கனவே வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களிடையே இப்படி விவசாயிகளின் அடுத்தடுத்த மரணங்கள் அவர்களை ரொம்பவே உலுக்கி போட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications