திடீர் வயிற்றுப் பிரச்சனை.. தஞ்சாவூர் சென்ற டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். இவர் அதிமுகவிற்கு மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலா - டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இதை டிடிவி தினகரனும் ஏற்றுக்கொள்வது போல கருத்து தெரிவித்து உள்ளார்.
ஆனால் அமமுக தனிக்கட்சியாக உருவெடுத்துவிட்டது. இதனால் அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமமுக உடன் கூட்டணியா? அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? - 'பரபர’ பதில் சொன்ன கே.எஸ்.அழகிரி!
தஞ்சாவூர்
இந்த நிலையில்தான் அமமுக நிர்வாகிகளை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் டிடிவி தினகரன் தஞ்சாவூர் சென்றார். நேற்று இரவு அவர் சாப்பிட்ட உணவு காரணமாக அவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு "புட் பாய்சன்" ஏற்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை
பெரும்பாலும் சிகிச்சை முடிந்து பிற்பகலில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வயிற்றுப்பிரச்சனை மட்டுமே. வேறு உடல் குறைபாடு இல்லை. அவர் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. வயிற்றுப்பிரச்சனை சரியானது இன்று பிற்பகல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காண அமமுக நிர்வாகிகள் பலர் குவிந்துள்ளனர்.
ஓபிஎஸ்
முன்னதாக டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்காக பணிகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்காக யாரையும் சந்தித்து பேச நான் தயார் என்று கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.