முதல் நாள் அணு ஏவுகணை சோதனை.. மறுநாளே சுகோய் 30.. தென்னிந்தியாவில் பாதுகாப்பை அதிகரிக்கும் அரசு!
அணு ஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட கே-4 ஏவுகணையை இந்தியா நேற்றுதான் சோதித்த நிலையில் இன்று தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய் 30 எம்கேஐ விமானம் சேர்க்கப்பட்டுள்ளது .
Recommended Video
தஞ்சாவூர்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட கே-4 ஏவுகணையை இந்தியா நேற்றுதான் சோதித்த நிலையில் இன்று தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய் 30 எம்கேஐ விமானம் சேர்க்கப்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களாக இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எல்லை, சீனா எல்லை என்று எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்பில் இது மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பை பலப்படுத்துவதில் ஒரு அங்கமாக, தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு 222 டைகர்ஷார்க்ஸ் (222 Tigersharks) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று என்ன
நேற்றுதான் ஆந்திராவில் கடல் பகுதியில் அணு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அணு ஆயுதம் இல்லாமல், இந்த ஏவுகணை மட்டும் சோதனை செய்யப்பட்டு, கடற்பரப்பில் வைத்து கே-4 ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. கடலுக்கு உள்ளே இருந்து வெளியே சென்று தாக்குதல் நடத்தும் சக்தி படைத்தது இது.

தூரம்
மொத்தம் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது. மிக முக்கியமாக குறிக்கப்பட்ட இடத்தை மிக துல்லியமாக தாக்கும், அதிகபட்சம் 40மீ வரை மட்டுமே இதில் தவறு நேர கூடும். உலகிலேயே இவ்வளவு துல்லியமாக தாக்கும் அணு ஏவுகணைகள் சிலதான் இருக்கிறது. அந்த அளவிற்கு வல்லமை கொண்டது கே-4 ஏவுகணை.

தாக்கியது
இந்த கே-4 ஏவுகணை சோதனையின் போது மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது. இதை முழுக்க முழுக்க மத்திய அரசின் டிஆர்டிஓதான் உருவாக்கியது. இதை இந்தியாவின் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பலான அரிஹந்த்தில் சேர்க்க உள்ளனர். அரிஹந்த் நீர் மூழ்கி கப்பல் தென்னிந்தியாவில்தான் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எவ்வளவு இடம்
சுமார் 750 கிமீ தூரத்தை தினமும் அரிஹந்த் ரோந்து மேற்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதத்தில் அரிஹந்த் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் தென்னிந்தியா மீது கவனம் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் ஆந்திராவில் சோதனை செய்யப்பட்ட கே-4 இன்னும் சில நாட்களில் அரிஹந்த்தில் சேர்க்கப்படும்.

நிறைய கேள்வி
நேற்று இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வல்லமை கொண்ட சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புப்படை திடீர் என்று தென்னிந்தியா மீது குறிப்பாக இந்திய பெருங்கடல் மீது கவனம் செலுத்த தொடங்கியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications