ஏழைகள் இருவரின் உயிரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்- கணவனை இழந்த பெண்கள் கலெக்டரிடம் மனு
கள்ளச்சாராயம் குடித்து ஏழைகள் மரணமடைவதால் சாராய வியாபாரியை கைது செய்யக் கோரி உயிரிழந்த நபரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தேனி: ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் திறந்து மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆண்டிபட்டி அருகே மது போதையில் சகோதரர்கள் அடுத்தடுத்து மது குடித்து மரணமடைந்தனர். இருவரின் மரணத்திற்கும் கள்ளச்சாராயம்தான் காரணம் என்றும் கள்ளச் சாராய வியாபாரியை கைது செய்ய வேண்டும் என்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி அமுதா தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ்,39,முனீஸ்வரன்,33, ஜோதிலட்சுமணன்,31 மற்றும் பாண்டியன்,29 ஆகியோர் அந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவிற்காக அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து மனைவி சமைத்துப் போட்ட பிரியாணியை உண்ட சிறிது நேரத்தில் லதா என்பவரின் கணவர் பாண்டியன் துடிதுடித்து பலியானார்.
பின்னர் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிணத்தை வைக்கக் கூடாது என்று கருதி அவசர அவசரமாக பாண்டியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அடுத்தடுத்த மரணம்
தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக பாண்டியனின் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி வருவாய் வட்டாட்சியர் மட்டும் கோட்டாட்சியர் முன்னிலையில் பாண்டியனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்து முடித்து உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் பாண்டியனுடன் மது அருந்திய அவரது இன்னொரு சகோதரரான ரமேஷ்,39ஆம் மரணமடைந்தார்.

உயிருக்கு போராட்டம்
அவர்களுடன் மது அருந்திய மற்ற இரண்டு சகோதரர்களான ஜோதிலட்சுமண் மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும் உடல்நிலை மோசமாகி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் இரண்டு பேர் உயிரிழந்ததற்கு மற்றும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதற்கும் காரணம் அவர்கள் அருந்திய மது தான் என்பது தெரியவந்தது.

கள்ளச்சாராயம்
டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கிய மது அருந்தவில்லை என்றும் அந்த ஊரில் சாராய வியாபாரம் செய்து வரும் ஜெயராம் என்பவரிடம் மது அருந்தியதாகவும் தெரியவந்துள்ளது. மரணமடைந்த ரமேஷின் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்வேறு தரப்பினரும் சமாதானம் செய்து அவரது உடலை அடக்கம் செய்தனர்.

கலெக்டரிடம் மனு
இந்நிலையில் முதலில் உயிரிழந்த பாண்டியனின் மனைவி லதா என்பவர் கடந்த 10ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தனது கணவரின் சாவுக்கு காரணமான சாராய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

சாராய வியாபாரியை கைது செய்யுங்க
இந்நிலையில் இன்று, உயிரிழந்த ரமேஷின் மனைவி அமுதா தனது 14 வயது பெண்குழந்தை ஐஸ்வர்யா மற்றும் 4 வயது ஆண் குழந்தை நித்தீஷ் ஆகியோருடன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து சாராய வியாபாரி ஜெயராமை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உயிரைக்கொல்லும் நஞ்சு
சாராயம் என்பதில் நல்ல சாராயம் என்றும் கள்ளச்சாராயம் என்றும் பிரித்துப் பார்க்க தேவையில்லை. இரண்டுமே உயிரைக் கொல்லும் நஞ்சு தான்.
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இது போன்று சாராயத்தைக் குடித்து உயிரை விட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுச்செல்லும் நபர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். முதலில் மதுக்கடைகளை அரசு தடை செய்ய வேண்டும். ஜெயராம் போன்ற சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications