Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரின் கிசான் சம்மன்.. 2000 ரூபாய் வாங்கிட்டீங்களா.. தபால் துறை சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 17வது தவணை தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்க 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

post office farmer

விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நேற்று முன்தினம் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் வணத்தை எடுத்துக்கொள்ள வசதியாக தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம், நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தவணைத் தொகையை தபால் துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ளலாம்.

பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைத்துள்ள எந்த ஒரு வங்கிக் கணக்கில் இருந்தும் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள், தபால்காரர், கிராமிய தபால் ஊழியர்கள் மூலம் கட்டணம் இன்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக வருகிற 30-ந் தேதி வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இது தவிர இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வேலை உறுதித் திட்ட பயனாளிகள், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி ஊக்கத்தொகை மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டப் பயனாளிகள், சிலிண்டர் மானிய பயனாளிகள், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட பயனாளிகள் ஏ.டி.எம். எந்திரத்தை தேடிச் செல்லும் நிலையை தவிர்த்து அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம்" இவ்வாறு தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PIV-KISAN) என்பது ஒரு மத்திய அரசின் திட்டம் ஆகும். இது நாட்டில் உள்ள நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய தேவைகள் மற்றும் தனிப்பட்ட செலவுக்காக ஆண்டுக்கு 6000 ரூபாய் வருமான உதவியை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 6000 வழங்கும் செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+