அதிமுகவிற்கு விசுவாசமாக இருங்கள்...2021ல் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த களப்பணியாற்றுங்கள் - ஓபிஎஸ்
கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள் நிர்வாகிகள் விசுவாசமாக இருக்கவேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தேனி: அதிமுகவினர் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஆட்சியில் துணை முதல்வராக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் இருந்து இந்த இருவரின் தலைமையின் கீழ் கட்சியும், ஆட்சியும் இருந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

அதிமுகவில் முதல்வர் சர்ச்சை
இந்த சூழ்நிலையில்தான் அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்ட நெருப்பை, ராஜேந்திர பாலாஜி ஊதிவிட பரபரப்பு பற்றிக்கொண்டது. கூடவே அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயக்குமார் என தொடர முதல்வர் வேட்பாளர் சர்ச்சை கொளுந்து விட்டு எரிந்தது.

அமைச்சர்கள் பஞ்சாயத்து
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அன்று நாள்முழுவதுமே முதல்வர், துணை முதல்வர் வீட்டில் மாறி மாறி சந்திப்புகளும் கூட்டங்களும் நடைபெற்றன. இதனையடுத்து கூட்டணி பற்றியும் முதல்வர் வேட்பாளர் யார் என்று பின்னர் அறிவிப்போம் கட்சிக்கு எதிராக யாரும் தலைமையை மீறி கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை பாயும் என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட அந்த சர்ச்சை அடங்கிப் போனது.

ஓ. பன்னீர் செல்வம் பேச்சு
2021 சட்டசபை தேர்தல் பணிகளை ரிஷி பஞ்சமி தினமாக இன்றைய தினம் தொடங்கி விட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ரிஷி பஞ்சமி தினத்தில் பணிகளை தொடங்கி விடுவார். அதே பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர் செல்வமும் அவரவர் சொந்த ஊர்களில் தொண்டர்களிடம் சட்டசபை தேர்தல் பணிகள் பற்றி பேசி வருகின்றனர்.

2021ல் அதிமுகவை வெற்றி பெற செய்யுங்கள்
இன்றைய தினம் பெரியகுளத்தில் தொண்டர்கள் மத்திய பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை மட்டுமே பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றார். பொறுப்பாளர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் கூறிய அவர், எனக்கு மட்டுமே தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதில்லை என்றும் தெரிவித்தார்.

வெற்றியே நமது இலக்கு
அதிமுக என்ற இயக்கம் பல நூற்றாண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு களப்பணியாற்ற வேண்டும். வெற்றியே நமது இலக்கு என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

படிப்பினையில் இருந்து பாடம் படிங்க
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லவையாக அமையட்டும். இதுவரை கிடைத்த படிப்பினைகள் நமக்கு பாடமாக இருக்க வேண்டும். 2021 சட்டசபை தேர்தல்தான் நம்முடைய இலக்கு. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
-
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications