மாதம் ரூ.20000 கிடைக்கும்.. தவறவிடக்கூடாத அருமையான வாய்ப்பு.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
தேனி: 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியை வெற்றிரகமாக முடித்தால் ஆரம்ப காலமாக மாத ஊதியம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கல்வி கடன் திட்டம் வழங்கப்படுகிறது. இதேபோல் பழங்குடியினருக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மானியமும் தரப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தாட்கோ நிறுவனம் டாடா, ஹெச்சிஎல் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்து வேலையும் தருகிறது. எனவே தாட்கோவில் உள்ள வாய்ப்புகள் குறித்த அறிவிப்பினை முறையாக பார்த்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்."இவ்வாறு அந்த அறிவிப்பில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications