தேனியில் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்.. எழுதி வாங்கிய சொத்து பறிபோக போகிறது.. எப்படி?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூதாட்டி சுப்புலட்சுமி (85) இவருக்கு இரண்டு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மூதாட்டி சுப்புலட்சுமி அனைத்து சொத்துக்களையும் மகன், மகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு தனது பூர்விக வீட்டில் தனது மகன் கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்துள்ளார். ஆனால் தாயை பார்த்துக் கொள்வதாக கூறி பூர்விக சொத்தை எழுதி வாங்கிவிட்டு மூதாட்டியை மகன் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். அவர் மீது மூதாட்டி சுப்புலட்சுமி புகார் அளித்துள்ளார்.
தாயை அல்லது தந்தையை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்து, அந்த நிபந்தனையின் அடிப்படையில் சொத்தை எழுதி வாங்கிய மகன் அல்லது மகள், பின்னாளில் கவனித்துக் கொள்ளத் தவறினால், அந்தச் சொத்தை சட்டப்படி திரும்பப் பெற முடியும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007 என்ற மத்தியச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத்தின் விதிகளின் படி, தாய் அல்லது தந்தை தனக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உடல்நலப் பராமரிப்பு வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன், தானமாகவோ (அல்லது மாற்றிக் கொடுக்கும் ஆவணம் மூலமாகவோ தன் மகனுக்கோ/மகளுக்கோ அல்லது உறவினருக்கோ சொத்தை எழுதித் தருகிறார். சொத்தைப் பெற்றவர், அந்த நிபந்தனையை மீறி, மூத்த குடிமக்களைக் கவனித்துக் கொள்ளத் தவறினால் அல்லது புறக்கணித்தால் அந்த சொத்து ஆவணம் செல்லாது.பழையபடி மூதாட்டிக்கே வந்துவிடும்.
இதற்குப் பிறகு, மூத்த குடிமக்கள், வருவாய் கோட்ட அதிகாரி அல்லது மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள முதியோர் பராமரிப்புத் தீர்ப்பாயத்தை அணுகிப் புகார் அளிக்கலாம். சொத்தை திரும்பப் பெற நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம். இதற்கென அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தாலே சொத்தை கலெக்டர் திரும்ப மாற்றி தந்துவிடுவார். இந்த சட்டப்படி பல முதியவர்கள் தங்கள் சொத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
அதேபோல் சொத்து ஆவணத்தில் பராமரிப்பு நிபந்தனை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும்கூட தீர்ப்பாயம் அந்தச் சொத்தை ரத்து செய்து பெற்றோரிடம் மீட்டுக் கொடுக்க முடியும் என்று நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. எனவே பெற்றோரை பார்த்துக் கொள்ள தவறினால், அவர்களது சொத்துக்களை பெற்றாலும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். தேனி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி. பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சுப்புலட்சுமி (85) இவருக்கு இரண்டு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மூதாட்டி சுப்புலட்சுமி தனது அனைத்து சொத்துக்களையும் மகன், மகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு தனது பூர்விக வீட்டில் தனது மகன் கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்
இந்த நிலையில் மூதாட்டியை பார்த்துக் கொள்வதாக கூறி பூர்வீக சொத்தினை கஸ்தூரி தனது பெயரில் எழுதி வாங்கிவிட்டு தற்போது தனது தாயை பராமரிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய மூதாட்டி சுப்புலட்சுமி தனது பூர்விக சொத்தினை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். தனது சொத்துக்கள் அனைத்தும் அபகரித்துக் கொண்டு தன்னை பராமரிக்காத தனது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தள்ளாத வயதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications