பதவிக்கு ஆசைப்பட்டதில்லை...சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை - ஜெயபிரதீப் வீடியோ
கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை. சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
தேனி: அதிமுகவின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை. சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப். அரசியலில் நேரடி தொடர்பின்றி ஆன்மிகம், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். இவரும் தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் பரவியது. கம்பத்தில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் தெரிவித்து வந்தனர்.
சட்டசபைத் தேர்தலில் ஜெயபிரதீப் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கொளத்தூர் தொகுதி, கம்பம் உள்ளிட்ட தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர் பட்டியல் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் ஜெயபிரதீப் பெயர் இடம்பெறவில்லை.
நன்றி வீடியோ
தனக்காக விருப்பமனு தாக்கல் செய்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓ.பி. ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்சி கொடியை பிடித்தேன்
7 வயதில் அதிமுக கொடியை கையில் ஏந்தினேன். 2001ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருக்கிறேன். இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் பணியாற்றியுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்களின் அதிகாரத்தை ஒருமுறைக்கூட ஆட்சி நிர்வாகத்திலோ கட்சி நிர்வாகத்திலோ ஒருமுறைக்கூட பயன்படுத்தியதில்லை.

சுயநலமில்லை
எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த வழியில் கட்சிக்காக கடைக்கோடி தொண்டனாக பணியாற்றுவதில் மனநிறைவோடு இருக்கிறேன்.
சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை. நான் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, இயற்கை வளத்தை மேம்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று கூறியுள்ளார்.

போடியில் பிரச்சாரம்
போடி தொகுதியில் போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வத்திற்காக தீவிர களப்பணியாற்ற முடிவு செய்துள்ளார் ஜெயபிரதீப். அவருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் எதுவும் இல்லை என்றும் அவரது நண்பர்கள் ஆர்வ மிகுதியில் விருப்பமனு தாக்கல் செய்து விட்டனர் என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications