ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்.. ஐடி அதிர்ச்சி தகவல்
Recommended Video
சென்னை: ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடத்தப்பட்ட சோதனையில் பணத்தோடு சேர்த்து ஒரு தபால் ஓட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமான வரி துறையினரை ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் நிர்வாகிகள் தடுத்தனர்.

வானை நோக்கி துப்பாக்கி சூடு
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் கட்சியினர் நடுவே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மோதலை தடுப்பதற்காக காவல்துறையினர் வானை நோக்கி நான்கு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

9 மணி நேரம் ரெய்டு
போலீசாரின் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளை, கட்சி அலுவலகத்துக்குள் செல்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனுமதித்தனர். இதையடுத்து சுமார் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

வார்டு எண்
அப்போது 94 பாக்கெட்டுகளில், வாக்காளர் பெயர், வார்டு எண்ணுடன் 1.48 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் ஒரு தபால் ஓட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தபால் ஓட்டு
அந்த தபால் ஓட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரின் பெயருக்கு நேராக டிக் செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலை வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications