தேனியில் வேன்- பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. 18 பேர் படுகாயம்
தேனியில் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி: தேனியில் சற்றுமுன் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி அருகே தீர்த்த தொட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தனியார் வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் எதிர் எதிர்திசையில் வந்துள்ள போது விபத்து நிகழ்ந்துள்ளது.
சற்றுநேரத்திற்கு முன் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட தகவல்கள் வருகிறது
கோவையில் கல்லூரி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!
இந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். இறந்த இருவரது உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் தேனியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தேனியில் மருத்துவமனையில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.