பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை.. 7 ஆண்டுக்கு பிறகு வந்து மன்னிப்பு கேட்ட மாணவி
தேனி: கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் என்பவர் ஆசிரியர் ஆவார். இவர் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.. இவர் மீது மாணவி ஒருவர் பொய்யான பாலியல் புகார் அளித்தார்.இந்த புகாரினால் அவரது நிறுவனம் மூடப்பட்டது. சிறைக்கு போனார். குடும்பமும் அவரை விரட்டிவிட்டது. இதனால் ஆசிரியர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கணவருடன் வந்து அந்த மாணவி மன்னிப்பு கேட்டார்
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ஜோமோன் ஆசிரியர் ஆவார்.இவரது வாழ்க்கை 2017ம் ஆண்டு சிறப்பாக போய் கொண்டிருந்தது. இவர் குருப்பந்தரை என்ற இடத்தில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு கொச்சியைச் சேர்ந்த மாணவி, ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குருப்பந்தரை போலீசில் புகார் கொடுத்தார்.

ஆசிரியர் கைது
இதை சரியாக விசாரிக்காத போலீசார், மாணவி புகார் அளித்துவிட்டார் என்ற ஒற்றை காரணத்தையும், உறவினர்கள், நண்பர்கள் ஆவேசப்படுகிறார் என்பதற்காகவும் ஜோமோனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் புகாரில் ஜோமோன் சிக்கியதால் அவரது நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவரது குடும்பம் ஒரே நாளில் ஏழ்மைக்கு போனது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.
ஜாமீனில் வந்தார்
அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோமோன் எவ்வளவோ எடுத்து கூறியும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். இதனால் குடும்பத்தை பிரிந்த ஜோமோன், தனிமையில் வாடினார். இதைத்தொடர்ந்து அவர் மாற்று வேலை செய்து ஏழ்மை நிலையில் வாழ்க்கையை கழித்து வந்தார்.
திருமணம் நடந்தது
இதற்கிடையே புகார் கொடுத்த மாணவிக்கு திருமணமானது. அவர் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பாலியல் புகாரால் ஆசிரியர் ஜோமோன் ஏழ்மையின் எல்லைக்கு சென்று விட்டது குறித்து மாணவிக்கு தெரியவந்தது. தன்னால் தான் இப்படி நடந்தது என்று மிகுந்த மனவேதனை அடைந்தார்.
மன்னிப்பு கேட்டார்
இதையடுத்து அந்த மாணவி நேற்று முன்தினம் ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு கணவருடன் சென்று திருப்பலிக்கு இடையே ஆசிரியர் ஜோமோன் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த மாணவி, மற்றவர்களின் தூண்டுதலின்பேரில் பொய் புகார் கூறியதாகவும், ஆசிரியர் ஜோமோன் நிரபராதி என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நீதிபதியிடம் வாக்குமூலம்
அத்துடன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜோமோன் மீது சிலரின் தூண்டுதலால் பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் தனது புகாரையும் வாபஸ் பெற்றார். இதைதொடர்ந்து ஜோமோனை இந்த வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. இதுகுறித்து ஆசிரியர் ஜோமோன் கூறுகையில், 'என் மீதான பாலியல் புகாரில் நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன். இதனை அறிந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொண்டனர்' என்று கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பேசு பொருளாக இருக்கிறது.
பொய் புகார்கள்
ஒரு மாணவி புகார் அளித்துவிட்டாலே ஒரு ஆசிரியர் பாலியல் குற்றவாளி என்று அறிவிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக பல ஆசிரியர்கள் இந்த செய்தியை பகிர்ந்து நியாயம் கேட்டு வருகிறார்கள். ஏனெனில் சரியாக படிக்காத மாணவியை படிக்க சொல்லி கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளிப்பது ஆங்காங்கே நடக்கிறது. கண்டித்த ஒரே காரணத்திற்காக ஆசிரியர்களின் நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் என எல்லாமே போய்விடுகிறது.
போக்சோ வழக்கு
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாலியல் குற்றவாளிகளை ஊடகங்களும் சித்தரிப்பதும் இதற்கு காரணம். போக்சோ வழக்கிலும் பொய்யான புகார் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. காதல் கைகூடாத போது,பொய்யான புகார் அளிப்பதும் நடக்கிறது. யார் மீது வேண்டுமானாலும் போக்சோ வழக்கில் புகார் அளித்து உள்ளே தள்ள முடியும். சிறுமிகள் யார் மீது தவறான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது வரும்.. ஏனெனில் சட்டம் அந்த அளவிற்கு பெண்களுக்கே சாதகமாக உள்ளது. போக்சோ வழக்கும், பாலியல் வழக்கும் அப்பாவிகளை பழிவாங்கும் கருவிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டையும் அப்பாவிகள் பாதிக்காத அளவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications