Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாயமான பூவரசன்.. இப்படி ஏமாந்துட்டோமே.. பாலத்தில் நின்றபடி அழுத கர்ப்பிணி.. ஓடி வந்து மீட்ட மக்கள்!

7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்ய முயற்சி செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

தேனி: இப்படி ஏமாந்துட்டோமே.. என்று புலம்பியபடி.. பாலத்தில் நின்றுகொண்டு ரொம்ப நேரமாக அழுது கொண்டே இருந்தார் 7 மாத கர்ப்பிணி பிரியங்கா.. இறுதியில் அணையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே வந்துவிட்டார்!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது அணைப்பட்டி என்ற கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா என்ற 20 வயது பெண்.. பூவரசன் என்பவரை காதலித்தார்.. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்!

young pregnant girl attempts suicide near theni

வீட்டில் எப்படியும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் 7 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இதில் பிரியங்கா கர்ப்பம் ஆனார்.. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பூவரசனை காணவில்லை.

பல இடங்களில் கணவனை தேடி அலைந்தார் பிரியங்கா.. ஆனால் கிடைக்கவே இல்லை என்பதால் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டார்.. சம்பவத்தன்று கூடலூர் அருகே உள்ள குறுவனத்து பாலத்திற்கு சென்றார்.. அந்த பாலத்தில் ரொம்ப நேரமாக நின்று கொண்டு அழுது கொண்டே இருந்துள்ளார். அப்போது முல்லை பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள தயாரானார்.

குதிக்க தயாராகும்போது, அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிவந்து பிரியங்காவை தடுத்து நிறுத்தினர்.. பிறகு, லோயர்கேம்ப் போலீசாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர். போலீசார் பிரியங்காவிடம் நடந்ததை விசாரிக்கும்போதுதான், எல்லா விஷயமும் தெரியவந்தது.

பூவரசன் எங்கே போய்விட்டார் என்பது தெரியாததால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+