முட்டி மோதிய பிரபு, ரவிக்குமார்.. இருவருக்கும் "ஓகே" சொன்ன சித்தாள்.. கடைசியில் நடந்த "அந்த" சம்பவம்

கள்ளக்காதலால் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

தேனி: சித்தாளிடம் அவரது காதலன் ஜாலியாக இருப்பதை ஒரு இளைஞன் நேரில் பார்த்துவிட்டார்.. அதை பார்த்ததும், தானும் சித்தாளிடம் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டு, கடைசியில் கொலை வரை அந்த சபல விவகாரம் கொண்டு வந்துவிட்டு விட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்துள்ளது கீழச்சொக்கநாதபுரம்.. இங்கு வசித்து வருபவர் பிரபு... அதே பகுதியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்... அதே பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.. இவருக்கு 25 வயதாகிறது.. டிப்ளமோ படித்துவிட்டு, பெங்களூருவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பெங்களூருவில் இருந்து வந்தார்.. இங்கு பிரபுவுடன் இணைந்து அவரும் கட்டிட வேலை பார்த்து வந்தார்... இருவரும் நண்பர்களாகி விட்டனர்.. வேலை முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிக்கும் அளவுக்கு வந்துவிட்டனர்.

புகார்

புகார்

இந்நிலையில், 10ம் தேதியில் இருந்து ரவிக்குமாரை காணோமாம்.. வேலைக்கு போனவர் வீட்டுக்கு திரும்பவே இல்லை.. அதனால் அவரது பெற்றோர் பதறி போய், போடி ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. போலீசாரும் அதன்பேரில் ரவிக்குமாரை தேடி வந்தனர்.. அப்போதுதான், அங்குள்ள ஒரு புதரில் ரவியை சடலமாக கண்டனர்.. ரவியின் முகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.. அவரை யாரோ வெட்டி படுகொலை செய்திருந்தது தெரிய வந்தது.

பிரபு

பிரபு

பிறகு போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் எப்போதும் கூடவே சுற்றி திரியும் நண்பர் பிரபுவின் மீது சந்தேகம் திரும்பியது.. ஆனால், பிரபுவோ, எந்தவித டென்ஷனையும் முகத்தில் காட்டி கொள்ளாமல், அந்த போலீசாருக்கே உதவி செய்வது போல நடித்து கொண்டிருந்தார்.. ஆனால் ஓவர் ஆக்டிங் தந்துவிட்டார்.. அவர்மீதே சந்தேகம் வலுவாக விழும் அளவுக்கு நல்லவன் போல நடிக்கவும், அவரிடமே விசாரணை தீவிரமானது.

சித்தாள்

சித்தாள்

அப்போதுதான் சித்தாள் என்ற பெயரே அடிபட்டது.. கட்டிட வேலைக்கு போகும்போது ஒரு சித்தாளுடன் பிரபுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இருவரும் பலமுறை ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.. ஒருநாள் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை ரவிக்குமார் நேரில் பார்த்துவிட்டார்.. அப்போது முதல், அவருக்கும் சித்தாள் மீது ஆசை வந்துவிட்டது.. அதனால், தன்னிடமும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று சித்தாளிடம் சொல்லி உள்ளார்.. இதற்கு சித்தாளும் ஓகே சொல்லி விட்டாராம். இந்த விஷயம் பிரபுவுக்கு தெரிந்து கொந்தளித்து போய் உள்ளார்..

கைது

கைது

இதனால்தான் பிரபு, ரவிக்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. வழக்கம்போல சம்பவத்தன்றும் ரவிக்குமாருடன் சேர்ந்து தண்ணி அடித்துள்ளார்.. போதை தலைக்கேறியபிறகு, அரிவாளால் ரவிக்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டார்.. அடையாளம் தெரியாமல் இருக்க ரவிக்குமாரின் முகத்தையும் சிதைத்துள்ளார்.. தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்று அந்த பகுதி முழுக்க மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. கடைசியில் பிரபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. எல்லாம் சரி, ரவிக்குமாருக்கும் ஓகே சொன்ன அந்த சித்தாளுக்கு என்ன தண்டனையோ?!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+