திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குற்றாலம் மெயினருவியில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றாலம் மெயின் அருவியில் மலைப்பாம்பு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குற்றாலம் மெயினருவிக்கு தண்ணீர் வரும். தற்போது மழை அதிகமாகியுள்ளதால் நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது.

A Python swept away in Courtallam main falls

இந்த தண்ணீர் வழியாக ஊர்வனங்கள் அடித்து செல்லப்படுவது வழக்கம். பொதுவாக அங்குள்ள பொங்குமா கடல் அருவி மூலம் ஊர்வனங்கள் தண்ணீரில் அடித்து குற்றாலம் குளிக்கும் பகுதிக்கு வருவது தடுத்து நிறுத்தப்படும்.

இந்நிலையில் இன்று குற்றாலம் மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. இதனால் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த மலைப்பாம்பு பொங்குமா கடல் அருவிக்கு செல்லாமல் அருவியின் ஓடை வழியாக அடித்து வரப்பட்டது. இதையடுத்து அதை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

English summary
A python which was swept away by water drops in Courtallam Main falls. Tourists get panic on seeing this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X