பாடித் திரியட்டும் பறவைகள்.. தொல்லை தராத கிராமம்.. பட்டாசு வாடையே அறியாமல் 24 வருடம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் கிராம மக்கள் பறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கு வரும். அப்படியிருக்கையில் நெல்லையில் ஒரு கிராமத்தில் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதையே தவிர்த்து வருகின்றனர் என்றால் ஆச்சரியமாக உள்ளது.

தமிழக அரசு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கூந்தன்குளம். இங்கு ஒரு குளம் உள்ளது. அதில் ஏராளமான பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிகின்றன. மக்களால் உருவாக்கப்பட்ட சரணாலயம் என்று 1994-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

எந்த நாட்டு பறவைகள்
இந்த குளத்துக்கு சைபீரியா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் வந்து செல்கினறன. இந்த குளத்தில் ஊசிவால் வாத்து, பட்டைதலை வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், செங்கால் நாரை, மஞ்சள் நாரை, கொக்குகள், கரன்டி வாயன் உள்ளிட்ட 43 வகை பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன.

இடையூறு
பறவைகள் ஆண்டுதோறும் தீபாவளி சீசனை ஒட்டியே வருகின்றன. இதனால் பட்டாசு வெடித்தால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும்.
மகிழ்ச்சி
எனவே கூந்தன்குளம் கிராமத்தில் கடந்த 24 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தீபாவளி, கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட பட்டாசு வெடிப்பதில்லை என்பது கிராம மக்கள் கூறுகின்றனர். வாயில்லா ஜீவன்களுக்காக தீபாவளி பண்டிகையின் அடையாளமான பட்டாசுகளை கிராமத்தினர் வெடிக்காதது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications