நாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்
நாங்குநேரி இடைத்தேர்தலலும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: இப்பதான் ஒரு பொதுத் தேர்தலையும், இடைத் தேர்தலையும் சந்தித்து விட்டு ஓய்ந்தது தமிழகம். அதற்குள் இதோ, மீண்டும் ஒரு இடைத் தேர்தல் வாசல் கதவைத் தட்டி நிற்கிறது.
நாங்குநேரி சட்டசபைத் தொகுதி காலியாகியுள்ளது. இத்தொகுதி காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியாகும். எச். வசந்தகுமார்தான் இதன் உறுப்பினராக இருந்தார்.
ஆனால் வசந்தகுமாருக்கு எப்படியாவது எம்பி ஆகி விட வேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைத்தால் மத்திய அமைச்சர் பதவியிலும் அமர்ந்து விட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது.

மத்திய அமைச்சர்
லோக்சபா தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். வலுவான பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பண பலம், ஆள் பலத்தை இறக்கி விட வசந்தகுமாரே சரியானவர் என்பதால் கட்சி மேலிடமும் சீட் கொடுத்தது. போட்டியிட்டார். திட்டமிட்டு செயல்பட்டார். ஜெயித்தும் விட்டார்.

குழப்பம்
நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டுள்ளது. தற்போது இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம்.

கருத்து
காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட விரும்புகிறதாம். நாமளே போட்டியிடுவோம். நமது தொகுதி இது. ஏற்கனவே சோளிங்கர் தொகுதி இடைத் தேர்தலில் அதை நாம் திமுகவுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால் நாங்குநேரியைத் தர வேண்டாம் என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறதாம்.

மும்முரம்
திமுக தரப்பில் வேறு யோசனையில் உள்ளனர். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சட்ட ரீதியாக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விடாமல் பயன்படுத்துவதில் திமுக மும்முரமாக உள்ளது. அந்த அடிப்படையில் நாங்குநேரியில் திமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றால், சட்டசபையில் அதிமுக பலத்தை மேலும் குறைக்க முடியும், நெருக்கடி ஏற்படுத்த முடியும் என திமுக கருதுகிறதாம்.

விவாதம்
விரைவில் இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை பேசவுள்ளதாம். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நாங்குநேரியில் திமுக போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாம். மறுபக்கம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பது வரை யோசிக்க ஆர்பித்து விட்டதாம்.

அமைதி
யார் போட்டியிடுவது என்பதில் பிரச்சினை வேண்டாம் பேசித் தீர்க்கலாம் என்ற அளவில் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதியாக இருப்பதாக இரு கட்சி வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications