நாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்
நாங்குநேரி இடைத்தேர்தலலும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: இப்பதான் ஒரு பொதுத் தேர்தலையும், இடைத் தேர்தலையும் சந்தித்து விட்டு ஓய்ந்தது தமிழகம். அதற்குள் இதோ, மீண்டும் ஒரு இடைத் தேர்தல் வாசல் கதவைத் தட்டி நிற்கிறது.
நாங்குநேரி சட்டசபைத் தொகுதி காலியாகியுள்ளது. இத்தொகுதி காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியாகும். எச். வசந்தகுமார்தான் இதன் உறுப்பினராக இருந்தார்.
ஆனால் வசந்தகுமாருக்கு எப்படியாவது எம்பி ஆகி விட வேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைத்தால் மத்திய அமைச்சர் பதவியிலும் அமர்ந்து விட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது.

மத்திய அமைச்சர்
லோக்சபா தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். வலுவான பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பண பலம், ஆள் பலத்தை இறக்கி விட வசந்தகுமாரே சரியானவர் என்பதால் கட்சி மேலிடமும் சீட் கொடுத்தது. போட்டியிட்டார். திட்டமிட்டு செயல்பட்டார். ஜெயித்தும் விட்டார்.

குழப்பம்
நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டுள்ளது. தற்போது இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம்.

கருத்து
காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட விரும்புகிறதாம். நாமளே போட்டியிடுவோம். நமது தொகுதி இது. ஏற்கனவே சோளிங்கர் தொகுதி இடைத் தேர்தலில் அதை நாம் திமுகவுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால் நாங்குநேரியைத் தர வேண்டாம் என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறதாம்.

மும்முரம்
திமுக தரப்பில் வேறு யோசனையில் உள்ளனர். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சட்ட ரீதியாக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விடாமல் பயன்படுத்துவதில் திமுக மும்முரமாக உள்ளது. அந்த அடிப்படையில் நாங்குநேரியில் திமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றால், சட்டசபையில் அதிமுக பலத்தை மேலும் குறைக்க முடியும், நெருக்கடி ஏற்படுத்த முடியும் என திமுக கருதுகிறதாம்.

விவாதம்
விரைவில் இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை பேசவுள்ளதாம். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நாங்குநேரியில் திமுக போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாம். மறுபக்கம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பது வரை யோசிக்க ஆர்பித்து விட்டதாம்.

அமைதி
யார் போட்டியிடுவது என்பதில் பிரச்சினை வேண்டாம் பேசித் தீர்க்கலாம் என்ற அளவில் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதியாக இருப்பதாக இரு கட்சி வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications