Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனுநீதியா.. சமநீதியா? மனுவின் சிலை அகற்றப்பட வேண்டும்.. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேச்சு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: இந்தியாவில் மனுவுக்கு சிலை இருப்பதாகவும் அது அவமானத்தின் சிலை, எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

மனு நீதி, சனாதனம் குறித்து சமீப காலமாக விவாதங்கள் அதிகரித்த வருகின்றன. கடந்த ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

Former High Court judge Chanduru says Manus statue should be removed from India

"இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என பேசியிருந்தார்.

இதற்கு திமுக அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து சிறு சிறு எதிர்ப்புகளே மேலெழுந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் பெரிய அளவில் இதை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் இதையே பாஜக தனதுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இந்தியா கூட்டணி சனாதன எதிர்ப்பை ஆதரிக்கிறது என்று தேர்தல் பிரசாரம் செய்தனர். வடமாநிலங்களில் இந்த பிரசாரம் பாஜகவுக்கு பெருமளவு கைகொடுத்து.

இது தொடர்பான வழக்கு பீகார், கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மனுவுக்கு சிலை இருப்பதாகவும் அது அவமானத்தின் சிலை, எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் 7-வது பொருநை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை புத்தக திருவிழாவில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் பங்கேற்றிருந்த சந்துரு இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது,

"தமிழகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார். ஆனால், ராஜ்பவனில் உள்ளவர் அவருக்கு காவி உடை அணிவித்து அழகு பார்க்கிறார். திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தால் இதனை சொல்லி இருக்க மாட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனதான ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்று பேசினார்.

இதற்காக உத்தரபிரதேசத்தில் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுவதற்கு 10 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலினோ 'இரண்டு ரூபாய் கொடுங்கள் போதும். நான் என் தலையை சீவிக் கொள்கிறேன்' என விளையாட்டாக கூறினாலும் அதில் பல அர்த்தங்கள் உள்ளன. மனு சாஸ்திரத்தில் பல காலகட்டங்களில் பல்வேறு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பிறப்பாலேயே சமமற்ற தன்மையை உருவாக்குவதுதான் மனுதர்மம் என்ற சாஸ்திரம். ஜாதியை பிரிவினை பேசுவதாகவே மனுதர்மம் உள்ளது. இந்தியாவிலே மனுவுக்கு என்று ஒரு சிலை உள்ளது. அது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் அமைந்துள்ளது. அது அவமானத்தின் சிலை. சென்னையில் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு சிலை உள்ளது. அதுவும் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து பூட்டி வைத்திருக்கிறோம். ஆனால் மனு சிலைக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.

மதச்சார்பற்ற, இறையாண்மை மிகுந்த நாடாக இந்தியா தொடர வேண்டுமானால் மக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும். மனுநீதியா, சமநீதியா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+