Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டார்ச் லைட் எங்கே? திசையன்விளை கடையில் ஜெயக்குமார் தனசிங்! புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடையில் டார்ச் லைட் வாங்கிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நெல்லை காங்கிரஸ் தலைவர் கே.வி.கே.ஜெயக்குமார் கடந்த மே 2 ஆம் தேதி திசையன்விளையில் ஒரு கடையில் டார்ச் லைட் வாங்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Jayakumar Dhanasingh s new cctv video released

அந்த சிசிடிவியில் ஜெயக்குமார் ஒரு கடையில் ஏதோ பொருட்களை வாங்க வந்துள்ளார். அவர் வியர்வையை தன்னிடம் இருந்த கைக்குட்டையால் துடைக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் பில்லிங் கவுன்ட்டரில் ஒரு சிவப்பு நிற டார்ச்லைட்டை வாங்கி அதை கடைக்காரர் பேட்டரி போட்டு எரிய வைத்து காட்டுகிறார். இப்படியாக இந்த சிசிடிவி காட்சிகள் உள்ளன.

ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தோட்டத்தில் இந்த டார்ச் லைட்டை காணவில்லை, ஒரு வேளை அதுவும் நெருப்பில் எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே ஜெயக்குமார் பயன்படுத்திய இரு செல்போன்களையும் காணவில்லை. இதை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி முதல் காணவில்லை என அவருடைய மகன் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் பாதி எரிந்த நிலையிலான உடல், அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயக்குமார் ஏதோ ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு சில கடிதங்கள் தங்களுக்கு வரவில்லை என நெல்லை மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது. இந்த மர்ம மரணம் தொடர்பாக 7 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு அவருடன் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தெல்லாம் தனிப்படையினர் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அவரது வயிற்றுக்கு மேல் இரும்பு தகடு இருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது கை,கால்கள் மின் வயரால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் ஜெயக்குமார் கடையில் டார்ச் லைட் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றும் 6ஆவது நாளாக ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+