கொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.. வள்ளியூரில் பரபரப்பு
சடலத்தை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது
நெல்லை: உறவுக்கு தடையாக இருந்த மனைவியை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசினார் கணவர்.. இதையடுத்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை கேரள போலீசார் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.
கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தன்னுடன் படித்த பள்ளி தோழி சுனிதாவை சந்தித்தார்.. இருவரும் நெருங்கி பழகினர்.. சுனிதா கணவனை விட்டு பிரிந்தவர்.. அதேபோல, பிரேம்குமாருக்கும் வித்யாவை பிடிக்காது.
இதனால் சுனிதாவும் - பிரேம்குமாருக்கும் காதல் பற்றி கொண்டது.. இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ நினைத்தனர். இதற்கு வித்யா தடையாக இருக்கவும் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.

பங்களா
வித்யா குண்டாக இருப்பாராம்.. அதனால் உடல் எடை குறைய சிகிச்சை அளிப்பதாக சொல்லி அவரை சென்று திருவனந்தபுரம் அருகே ஒரு பங்களாவில் தங்க வைத்துள்ளனர்.. பங்களாவின் கீழ்பகுதியிலேயே சுனிதாவும் தங்கி உள்ளார். நள்ளிரவில் வித்யாவுக்கு மருந்து என்று மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்.

பிளேடு
மயங்கி விழுந்ததும் இருவரும் சேர்ந்து வித்யாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. சுனிதா நர்ஸ்-ஆக வேலை பார்ப்பதால், ஆபரேஷனுக்கு பயன்படுத்தும் பிளேடால் உடலை துண்டாக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது தோல்வி அடைந்ததால் உடலை காரில் கொண்டு வந்து வள்ளியூரில் ரோட்டோரம் கிடந்த ஒரு புதர்காட்டில் சடலத்தை வீசி சென்றதாக 2 பேருமே போலீசில் வாக்குமூலம் தந்தனர்.

செல்போன்
மேலும் போலீசாரை குழப்ப, வித்யாவின் செல்போனை பீகார் செல்லும் ரயிலில் போட்டுவிட்டதாகவும் கடந்த 2 மாசமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சுனிதாவும், பிரேம்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

மறு பிரேத பரிசோதனை
கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைந்த நிலையில்தான் வித்யாவை போலீசார் மீட்டனர். ஆனால் அவரது சடலத்திற்கு யாருமே உரிமைக்கோரி வராததால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இந்நிலையில் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் சேர்ந்து வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications