கல்குவாரி விபத்து: இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்.. மீட்பதில் தொய்வு
நெல்லை: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நடந்த விபத்தில் 300 அடி ஆழத்தில் இடிபாடுகளுக்குள் மேலும் ஒரு உடல் இருப்பது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி இரவு பாறை சரிந்தது. அதில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். சுமார் 300 அடி ஆழ கல்குவாரியில் தொடர்ந்து பாறைகள் சரிந்து கொண்டே இருந்ததால் மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் ஏற்கெனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் 5ஆவது நபரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள், காவல்துறையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து மண்ணும் கற்களும் சரிந்து கொண்டே இருப்பதால் 5ஆவது நபர் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீட்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
4ஆவது நாளாக மீட்பு பணியில் ஈடுபட முயன்ற போது காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் மீட்பு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 6ஆவது நபரை தேட மோப்ப நாய் வரவழைக்கப்படடுள்ளது.
Recommended Video
மழை குறைந்தவுடன் நாளை காலை 11.30 மணிக்கு மீட்பு பணிகள் தொடங்கி 5ஆவது நபரின் உடல் மீட்கப்படலாம் என தெரிகிறது. 6ஆவது நபரின் உடல் கிடக்கும் பகுதியைக் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications