விவசாய நிலங்களை காவு வாங்கும் 4 வழிச்சாலை.. கடையநல்லூரில் விவசாயிகள் மறியல்
Recommended Video

நெல்லை:நெல்லை மாவட்டத்தில் திருமங்கலத்திலிருந்து, கொல்லம் வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது.இந்த திட்டத்திற்காக மக்களிடமிருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை தாலுகா,கடையநல்லூர் தாலுகா, வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பு ஒரு புறம் இருக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நின்றபாடில்லை. விவசாயிகள் பொன்னு வெளையற பூமியை இப்படி பன்றீங்களேயான்னு கூப்பாடு போட்டு கண்ணீர் விடுவது வேதனை தருவதாக இருக்கிறது.
பல்வேறு முறை நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்கொடுத்து முற்றுகையிட்டு வந்தனர். இந்த நிலையில் செங்கோட்டையிலுள்ள நிலமெடுப்பு அலுவலகத்திலும் எதிர்ப்புத்தெரிவித்து மனு அளித்தனர். விவசாயிகள் என்ன போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காது என்று தெரிந்தும் போராட்டம் நடத்துவது வேதனை. அதைத் தவிர அவர்களுக்கு மாற்றுவழி எதுவும் இல்லை என்றாலும், 4 வழி சாலை அமைக்க அரசுக்கும் மாற்று வழி கிடைக்கவில்லை.
இன்று கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் மாவட்ட நிலமெடுப்பு வருவாய் அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
இதில் பொது மக்கள் , விவசாயிகள் அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இது குறித்து மக்கள் கூறுகையில் அமைய இருக்கும் நான்கு வழிச்சாலையை மாற்று வழித்தடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications