10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை
நெல்லை: 10-ம் வகுப்பு தேர்வில் பெயில் ஆகிவிட்டதால், சுடுகாட்டிற்கு சென்ற மாணவர் புடவையில் தூக்கு போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்!
நெல்லை அருகே அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். வயது 18. இவருக்கு அப்பா இல்லை. அதனால் அம்மா ஒரு சித்த மருத்துவமனையில் வேலை பார்த்து மகனை படிக்க வைத்தார். 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சுரேந்தர் தோல்வி அடைந்துவிட்டார்.

அதனால் ஒரு டுடோரியல் காலேஜில்தான் சுரேந்தர் திரும்பவும் 10-ம் வகுப்பு சேர்ந்து படித்தார். தேர்வும் எழுதினார். ஆனால் இந்த முறையும் சுரேந்தர் பெயில் ஆகிவிட்டார்.
அதனால் விரக்தி அடைந்த அவர், நெல்லை சேந்திமங்கலம் ஆற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டுக்கு சென்றார். கையில் ஒரு சேலையை கொண்டு போயிருந்தார். அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து இன்று காலையில் அந்த பகுதி மக்கள் ஆற்றில் குளிக்க சென்றார்கள். மரத்தில் தொங்கிய சடலத்தை பார்த்ததும், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசாரும் சடலத்தை மட்டு பாளையங்கோட்டை அரசு ஆட,ஸபத்ரிரிக்கு அனப்பி வைத்தது.












Click it and Unblock the Notifications