சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.
திருநெல்வேலி: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.
எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான எழுத்தாளர். இவருக்கு என்று தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. தென் தமிழகத்தின் வாழ்வியலை புனையக்கூடியதில் வல்லவர், தோப்பில் முகமது மீரான்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம்தான் இவரது பூர்வீகம். தமிழில் எழுதுவது மட்டுமில்லாமல் மலையாளத்தில் எழுதுவதிலும் இவர் கைதேர்ந்தவர். 1944ல் பிறந்த இவர் தனது பதின்ம வயதுகளில் இருந்தே புதினங்களை எழுதி வருகிறார்.
தமிழ், மலையாளம் இரண்டிலும் இவர் புதினங்களை எழுதி இருக்கிறார். தோப்பில் முகமது மீரான் தனது எழுத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாய்வு நாற்காலி நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக எழுதாமல் இருந்தார். கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறி கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை நெல்லை பேட்டையில் நடக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications