தென்காசி கோவிலில் கோலாகல மாசி மக தேரோட்டம்.. பக்தர்கள் குவிந்தனர்
Recommended Video

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் வருடாந்திர மாசி மகம் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடடுப்பாட்டில் இயங்கும் காசி விசுவநாதர் ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.

வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாக கருதப்படும் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு. அதே போல் இந்த ஆண்டிற்கான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும், ரிஷபம், யானை , பூங்கோயில் போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது.

மேலும் தினமும் சமய சொற்பொழிவுகள், ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழச்சிகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 9-ஆம் திருநாளான இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டுவந்த பக்தர்கள்,உள்ளூர் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி,அம்பாள் திருத்தேரை சன்னதி வீதிகளில் சிவ கோஷம் .முழங்க பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
ஆங்காங்கே பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மோர், சர்க்கரை பானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு சக்திவேல், ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக சாமி தேர் சன்னதி வீதியில் செல்லும் போது கேபிள் வயர் தேரின் கும்பத்தில் சிக்கியதால் சிறிது நேரம் தேர் உலாவில் தாமதம் உருவானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications