நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தாடி பாலாஜி இணைகிறாரா? அப்போ ஏன் அவர் திருவள்ளூர் போனாரு?
திருவள்ளூர்: நடிகர் விஜய் எந்த நல்ல விஷயம் செய்தாலும் அங்கு நானும் கண்டிப்பாக இருப்பேன் என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு தாடி பாலாஜி வந்திருந்தார். அவர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தர்ப்பூசணி துண்டுகள், நீர் மோர், இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். இத்தனை சூரிய வெப்பத்தையும் தாண்டி நான் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா? வெயிலில் மக்கள் வாடி கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்து நீர் மோர், பழச்சாறு உள்ளிட்டவைகளை கொடுத்து வருகிறார்கள்.
எங்கு திரும்பினாலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட மேற்கு இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. திடீரென இந்த நிகழ்வுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நடிகர் விஜய் எந்த விஷயம் செய்தாலும் நான் அங்கு இருப்பேன். விஜய்யும் விஜய்யின் தந்தை எஸ்ஏசியும் எனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்கள். அதற்கு நன்றிக் கடனாக தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி எப்போது அழைத்தாலும் சரி நான் வந்து கலந்து கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தினருடன் பயணிப்போம். எதிர்காலத்தில் கட்சியில் சேருவேனா என்பதை அப்போது பார்த்துக் கொள்வோம். 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் நன்றாகத்தான் இருக்கிறது. யாரோ தவறு செய்வதால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுகிறது. மக்களும் அரசின் நலத்திட்டங்களை வாங்கிக் கொண்டு அவர்களை திட்டுவது தவறு.
திமுக ஆட்சிக்கு மார்க் போட நான் என்ன வாத்தியாரா, நான் ஒரு நடிகர். எந்த கட்சி நல்லது செய்தாலும் அக்கட்சியுடன் பயணிக்க தயாராக உள்ளேன். லோக்சபா தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற குழப்பத்தில் எல்லோரும் இருப்பதை போல் நானும் இருக்கிறேன் என தெரிவித்தார்.
நடிகர் தாடி பாலாஜியை சுற்றி அவருடைய குடும்ப வாழ்க்கை தொடர்பாக அவ்வபோது சர்ச்சைகள் எழுந்தாலும் அவர் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லட்சயா ஸ்ரீயை அவருடைய அரக்கோணம் வீட்டில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
அது போல் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற நாங்குநேரி சின்னத்துரையையும் சந்தித்து தாடி பாலாஜி வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் திமுகவில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தவெக நிகழ்ச்சிக்கு போனதை போல் திமுகவின் மக்கள் நலம் சார்ந்த விஷயங்களிலும் கலந்து கொண்டதாகவே சொல்லப்படுகிறது.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications