திமுக நிர்வாகியின் "ஆபாச" வீடியோ.. பரிதாப இளைஞர்.. யாரந்த பெண்.. இப்படி ஆயிடுச்சே.. அதிர்ந்த பொன்னேரி
பொன்னேரி நகர திமுக அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருவள்ளூர்: திமுக நிர்வாகி ஒருவருக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. நாலாபக்கமும் டார்ச்சர்கள் அதிகரித்துவிட்டதால், இப்படி ஒரு முடிவை அந்த பரிதாப இளைஞர் எடுத்துள்ளார்.. போலீசாரும் இதை பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி திமுக இளைஞரணி அமைப்பாளர் திவாகர். 32 வயதாகிறது.. இவருக்கு கல்யாணமாகிவிட்டது.. மனைவி பெய்ர ரஞ்சனி.. 2 பெண் குழந்தைகளும் இவருக்கு உண்டு..
தடபெரும்பாக்கம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை சொந்தமாகவே நடத்தி வருகிறார் திவாகர்.. இதைதவிர, வாஷிங் மெஷின், ஏசி ரிப்பேர் பார்க்கும் கடையையும் நடத்தி வந்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
இவரது கடையில் முனிரத்தினா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு வயது 22.. கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.. நாளடைவில் இந்த பெண்ணுடன் திவாகருக்கு பழக்கம் ஏற்பட்டு, அதுவே கள்ள உறவாக மாறி இருக்கிறது.. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.. ஆனால், இந்த பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அவர் பெயர் பிரகாஷ்.. சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய வீட்டை விற்று பணத்தை வைத்திருந்தார் திவாகர்..

உல்லாசம்
இந்த விஷயம் எப்படியோ பிரகாஷூக்கு தெரிந்துவிட்டது.. அந்த பணத்தை அபகரிக்க திட்டம் போட்டார். இதற்காகவே, முனிரத்தினாவின் செல்போனை பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளார்.. அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் திவாகருடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்திருக்கின்றன. இதை திவாகரனிடம் காட்டி, 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார் பிரகாஷ்.. ஆனால் திவாகரன் பணம் தர மறுத்துவிட்டாலும் கொலை மிரட்டல் தொடர்ந்துள்ளது.. இது திவாகருக்கு அதிர்ச்சியையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியது..

ஆபாச வீடியோ
இதனிடையே முனிரத்தினா தன்னுடைய அம்மாவை அழைத்துகொண்டு திவாகரனிடம் வந்தார்.. ஆபாச வீடியோவால் எதிர்காலமே பாதிக்கப்பட்டுவிட்டதால், தன்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று டார்ச்சர் தந்துள்ளார்.. ஒருபக்கம் ஆபாச வீடியோ, மறுபக்கம் பணம் கேட்டு மிரட்டல், இதற்கு நடுவில் கள்ளக்காதலியின் டார்ச்சர் என மொத்தமாக சேர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளானார் திவாகர்.. இறுதியில், தன்னுடைய கடையிலேயே வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

டார்ச்சர்
இதையடுத்து பிரகாஷ், முனிரத்தினா, அவரது அப்பா, அக்கா ஆகியோர் மீது திவாகரின் மனைவி ரஞ்சனி, பொன்னேரி போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரில், "முனிரத்தினாவுடன் உள்ள தொடர்பை என் கணவர் விட்டு விடும் நிலை இருந்தது. ஆனால், அதற்குள் அந்த பெண்ணின் தாய், அக்காள் மற்றும் அண்ணன் ஆகியோர் எனது கணவரை ஏமாற்றி விட்டதாக மிரட்டினர். மேலும் ரூ.10 லட்சம் கேட்டனர். கணவரிடம் என்னை விவாகரத்து செய்யும்படியும் கட்டாயப்படுத்தினர். இதனால் கணவர் மிகவும் மனவேதனையில் இருந்தார்.

தொந்தரவு
அந்த இளம்பெண் ஏற்கனவே வேறு வாலிபரை காதலித்து உள்ளார். வீட்டை விற்று கணவர் பணம் வைத்து இருந்தார். இதனை அறிந்து அவர்கள் பணத்தை பறிக்க தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் கணவர் திவாகர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று புகார் மனுவில் கேட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அனைவருமே எஸ்கேப் ஆகிவிட்டனர்.. அவர்களை பிடிக்க போலீசார் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications