Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல் டாக்டர் செய்த காரியம்.. 3வது மனைவியாக மகள் காதல் திருமணம்.. விரக்தியில் பெற்றோர் தற்கொலை

மகள் 3வது திருமணம் செய்ததால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: ஆசை ஆசையாய் வளர்த்த மகள், 3வது மனைவியாக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் இருவரும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்துள்ளது மப்பேடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் தாமரைசெல்வன்.. 60 வயதாகிறது.. மனைவி பெயர் சரளா.. 55 வயதாகிறது.

இவர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார்.. இவரை பாடுபட்டு பல் டாக்டருக்கு பெற்றோர் படிக்க வைத்தனர். ஒரே மகள் என்பதால், அவருக்கு விருப்பமானதை எல்லாம் செய்து தந்து, டாக்டராக்கி உள்ளனர்.

 திருமணம்

திருமணம்

ஆனால், அர்ச்சனா கணபதி என்பவரை காதலித்துள்ளார். அவர் அக்கரப்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. இந்த காதலுக்கு அர்ச்சனா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. ஆனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.. காரணம், கணபதி ஏற்கனவே 2 திருமணங்கள் செய்தவராம்.

 2 மனைவிகள்

2 மனைவிகள்

2 மனைவிகளும் கருத்து வேறுபாடு காரணமாக கணபதியை விட்டு பிரிந்து விட்டனர்.. இப்போது 3வதாக அர்ச்சனாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார் கணபதி.. செல்லமாக வளர்த்து டாக்டருக்கு படிக்க வைத்தால், 3வது மனைவியாகிவிட்டாரே என்ற மன உளைச்சலுக்கு பெற்றோர் இருவரும் ஆளாகி உள்ளனர்.. இதனால் கடந்த சில நாட்களாகவே இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி


இந்நிலையில் இன்று காலையில் தாமரைச்செல்வன் வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.. அப்போது வீட்டிற்குள் சரளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ந்து போனார்.. உடனே வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தானும் குடித்து விட்டு தாமரை செல்வன் தற்கொலை செய்துகொண்டார்..

சடலம்

சடலம்

நீண்ட நேரமாக இருவரும் வெளியே வராமல் இருந்ததால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதனால் வீட்டிற்குள் வந்து பார்த்தபோதுதான், 2 பேரும் சடலமாக விழுந்து கிடப்பதை பார்த்து அலறினர்.. உடனடியாக ஊத்துக்கோட்டை போலீசுக்கும் தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த தம்பதியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+