புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கொலை! கஞ்சா விற்றதை போலீசுக்கு சொன்னதால் கொடூரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாழவேடு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை பார்த்த ஒருவரின் கையையும் அந்த போதைக் கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறது. கஞ்சா போதையில் கொலை செய்த 3 பேரையும் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். . கஞ்சா விற்பனை குறித்து புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் தகவல் கொடுத்ததாலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் இனிமேல் கஞ்சாவே இல்லை என்கிற நிலையை உருவாக்க அரசு தரப்பிலும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுகப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலையில் தொடர்புடைய 3 பேரையும் பிடிக்க காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை கைது செய்ய பின்னர் நடத்தப்படும் விசாரணையின் மூலம் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications