புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கொலை! கஞ்சா விற்றதை போலீசுக்கு சொன்னதால் கொடூரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாழவேடு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை பார்த்த ஒருவரின் கையையும் அந்த போதைக் கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறது. கஞ்சா போதையில் கொலை செய்த 3 பேரையும் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். . கஞ்சா விற்பனை குறித்து புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் தகவல் கொடுத்ததாலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் இனிமேல் கஞ்சாவே இல்லை என்கிற நிலையை உருவாக்க அரசு தரப்பிலும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுகப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலையில் தொடர்புடைய 3 பேரையும் பிடிக்க காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை கைது செய்ய பின்னர் நடத்தப்படும் விசாரணையின் மூலம் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications