புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கொலை! கஞ்சா விற்றதை போலீசுக்கு சொன்னதால் கொடூரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாழவேடு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை பார்த்த ஒருவரின் கையையும் அந்த போதைக் கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறது. கஞ்சா போதையில் கொலை செய்த 3 பேரையும் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். . கஞ்சா விற்பனை குறித்து புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் தகவல் கொடுத்ததாலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் இனிமேல் கஞ்சாவே இல்லை என்கிற நிலையை உருவாக்க அரசு தரப்பிலும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுகப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலையில் தொடர்புடைய 3 பேரையும் பிடிக்க காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை கைது செய்ய பின்னர் நடத்தப்படும் விசாரணையின் மூலம் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications