Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. உ.பி. இளைஞரிடம் போலீஸார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் மாந்தோப்புக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசராணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவிபெறும் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி பள்ளி முடிந்து நண்பகலில் வீட்டிற்குச் செல்வதற்காக ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.

Tiruvallur child harrasment

அப்போது அந்த சிறுமியை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிறுமியை தூக்கிச் சென்று, மாந்தோப்புக்குள் ஆள் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த, ஜூலை 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்தி மொழியில் செல்போனில் பேசிய அந்த மர்ம நபர் மற்றொரு நபரையும் அழைத்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அச்சிறுமி, அந்த மர்ம நபரின் கண்ணில் மண்ணை வாரி துவிவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் சிறுமியை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு சிறுமியிடிம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துல்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மர்மநபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

அந்த நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் மர்ம நபரை அடையாளம் காண்பதற்காகவும், துப்பு துலக்கவும் இந்த நபர் குறித்த தகவல்கள் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். மர்ம நபர் குறித்து ஏதேனும் தகவல் மற்றும் விவரம் தெரிந்தால் 99520 60948 என்ற மொபைல் போன் எண்ணுக்கு நேரடி அழைப்பு மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+