சித்ரா பவுர்ணமி! திருவண்ணாமலையில் சிஎன்ஜி நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வந்தவர்கள் CNG- நிரப்புவதற்காக தங்களது வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல நேற்று திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பலர் தங்களுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்தனர்.

இந்த நிலையில் கிரிவலத்தை முடித்துவிட்டு பலர் தங்களது வாகனங்களில் சிஎன்ஜி நிரப்ப அங்கிருந்த பங்க்குகளுக்கு விரைந்தனர். அப்போது அங்கு கார், ஆட்டோ உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

திருவண்ணாமலை மாநகர சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல CNG பங்க்குகளில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததாலும், லோடு வராததாலும் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

இதேபோல் வேலூர் மாநகர் பகுதியிலும் CNG தட்டுப்பாடு ஏற்பட்டு ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது.
இது குறித்து CNG பங்க் ஊழியர்களிடம் கேட்ட போது, போதிய அளவுக்கான லோடு வராததாலும், கிடைக்காததாலும் ஏராளமான வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications