ஜாதிவாரி கணக்கெடுப்பு.. நேற்று எங்க அப்பா ராமதாஸ்.. இன்று அவரு பிள்ளைங்க நாங்க போராடுகிறோம்: சீமான்
திருவண்ணாமலை: ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசே நடத்தலாம் என்பதற்கு பீகார் உதாரணமாக இருக்கும் போது ஏன் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பில் ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். தமிழ் தேசிய இனம் ஒரு தொன்மை இனம். இதற்கென ஒரு மெய்யியல் கோட்பாடும் வழிபாட்டு முறையும் இருக்கிறது. எங்களுக்கு கடவுள் இல்லை. எங்களுக்கு இறை, தெய்வம் உண்டு. எங்கள் முன்னோர்களை வழிபடுகிற குலதெய்வ வழிபாட்டு முறை எமக்கு உண்டு. அதான் முருகன், சிவன், வேந்தன் இந்திரன், கொற்றவை வழிபாடு. சிவகங்கை மாவட்டத்தில் வீரமாகாளியம்மன் எங்கள் குல தெய்வமாக இருக்கிறது. நான் வேலை கையில் எடுத்த போது சுப.வீரபாண்டியன் மூலமாக முரசொலியில் காரி உமிழ்ந்தீர்கள். அதையே பாஜக கையில் எடுத்த போது நீங்களும் கையில் எடுத்தீர்கள். நீங்கள் செய்தால் மட்டும் சரியா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்புகிறார். திமுக நேற்றுதான் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்ததா? நாங்கள் பேசலாம். அதிகாரத்துக்கு வரலை. எங்க தாத்தா ஆனைமுத்து பேசினாரு.. அதுக்கு அப்புறம் எங்க அப்பா ராமதாஸ் அய்யா ராமதாஸ் பேசினாரு.. அதற்கு அப்புறம் அவரு பிள்ளைங்க நாங்க பேசுறோம். நீங்க எங்க பேசுறீங்க? ஜாதிவாரி கணக்கெடுப்பை நீங்க எடுக்க முடியாதா? பீகாரில் நிதிஷ்குமார் இப்படித்தான் பிரதமருக்கு கடிதம் எழுதிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாரா? பாஜகதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதுன்னு தெரியுமே.. அவங்களோட உண்மையான எண்ணிக்கை தெரிஞ்சுடுமே.. அமாதிரி திமுகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.. ஏனெனில் தமிழர் அல்லாதோர் எத்தனை இடங்களை அபகரித்திருக்கிறார்க என்பது அம்பலமாகிவிடும் என்பதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது திமுக அரசு.
இந்தியாவில் கூட்டாட்சி என்பதே இல்லையே. இந்தியாவில் ஒவ்வொரு மாநில கட்சிகளும் ஒன்று கூடி சுழற்சி முறையில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்ளும் போதுதான் என் தேசம், என் மக்கள் என்ற உணர்வு வரும். இந்தி மொழி பேசுகிறவர்களுக்குதான் பிரதமர் பதவி என்கிற போது எப்படி தேசம், மக்கள் என்கிற உணர்வு வரும்? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications