மொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்!
சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடியவர் போலீசில் சிக்கி கொண்டுள்ளார்
திருவண்ணாமலை: "டேய்.. வாசல் தாண்டின உடனே மொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா" என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவாரே.. அதே மாதிரி மிளகாய் பொடி தூவும் போது கொள்ளையன் சிக்கி கொண்டான்.. அது மட்டுமில்லை.. காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயலும்போது, கீழே விழுந்து காலையும் உடைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் இப்போது கட்டு போட்டு படுத்துள்ளார்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வசித்து வருபவர் சிவசாம்பு. இவர் கடலாடி ஸ்டேஷனல் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ரிடையர் ஆனவர். வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்த இவர், நேற்று வீட்டுக்கு திரும்பினார்.

ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, ஒரு திருடன் கையில் டிவி பெட்டியுடன் தப்பி செல்வதற்காக, மேல்மாடியில் இருந்து, அங்கிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி வெளியேறி குதித்தார்.
இதில், திருடனுக்கு காலில் பலமான அடிபட்டு, அதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. அதனால் அங்கேயே சுருண்டு விழுந்துவிடவும், சிவசாம்பு உட்பட பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து.. போளூர் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தனர். விசாரணையில் இந்த திருடன் பெயர் சதீஷ் என்பது தெரிய வந்தது.
பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதுதான் சதீஷுக்கு வேலை. அதன்படி சிவசாம்பு வீட்டுக்கு திருட வந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டார் சதீஷ்.
இவ்வளவு பொருட்களை எடுத்தாலும், சிவசாம்பு வீட்டில் இருந்த டிவி பெட்டியை சதீஷுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதனால் அதையும் சத்தமில்லாமல் கழட்டி கையில் வைத்து கொண்டார். நேராக கிச்சனுக்கு போய் டப்பாவில் இருந்த மிளகாய் பொடியை வீடு முழுக்க தூவினார்.
ஆனால் அதற்குள் சிவசாம்பு வந்துவிடவும், அப்படியே மாடியிலிருந்து டிவி பெட்டியுடன் ஜம்ப் ஆகி குதித்து தப்பிவிட முயன்றபோதுதான் கீழே விழுந்து காலை உடைத்து கொண்டார். ஆட்டைய போட வந்த வீடு, போலீஸ்காரர் வீடு என்பது தெரியாமலேயே இப்போது சிக்கி கொண்டு விழிக்கிறார் சதீஷ்!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications