திருவண்ணாமலையில் பரபரப்பு... அத்துமீற முயன்ற கொழுந்தனார்.. வெட்டி கொலை செய்த அண்ணி!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனாரை அவரது அண்ணி வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் ராஜா, இவர் தகாத முறையில் நடக்க முயன்றதால், அவரது அண்ணி பராசக்தி வெட்டிக்கொலை செய்துள்ளார்

thiruvannamalai: sister-in-law who killed her husbands brother

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பராசக்தி. செல்வம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருவதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். வீட்டில் தனியாக இருக்கும் பராசக்தியிடம் செல்வத்தின் தம்பி ராஜா தவறாக நடந்து கொள்ள முயன்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவும் குடித்துவிட்டு வந்த செல்வம். குடிபோதை வெறியில்,அண்ணி பராசக்தியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பராசக்தி, செல்வத்தை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பராசக்தியை அழைத்து விசாரித்து வருகிறார்கள்.

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனாரை அவரது அண்ணி வெட்டிக் கொலை செய்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+