மன்னார்குடியில் அரசுப் பள்ளி மாணவிகள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
திருவாரூர்: மன்னார்குடியில் அரசுப் பள்ளி மாணவிகள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளியில் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 5மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவிகளுக்கு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications