லலிதா ஜுவல்லரி கொள்ளை.. உச்சக்கட்ட பரபரப்பு... மணிகண்டனை தொடர்ந்து.. சுரேஷும் சிக்கினான்
லலிதா ஜுவல்லரி கடையில் திருடிய இருவரில் ஒருவன் திருவாரூரில் சிக்கினான்.
Recommended Video
திருவாரூர்: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் போலீசாரின் விசாரணை உச்சக்கட்ட சூட்டில் உள்ளது. திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மேற்றும் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே ஒரு மணிகண்டன் என்ற கொள்ளையன் சிக்கிய நிலையில், இப்போது சுரேஷ் என்பவனும் வசமாக சிக்கி கொண்டுள்ளான்.
பிடிபட்ட நபரிடமிருந்து 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையிலிருந்து திருடப்பட்டவை என்பது பார் கோடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடையில் துளையிட்டு
இரவு நேரத்தில், நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

சிசிடிவி பதிவுகள்
கொள்ளையர்கள் வட மாநிலத்தவரா, கடை ஊழியர்களுக்குத் தொடர்பு உண்டா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. நேற்றுதான் கடையின் சிசிடிவி பதிவுகளும் கூட வெளியாகியிருந்தன. இந்த நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டார்.

ஒருவன் சிக்கினான் இன்னொருவன் ஓட்டம்
2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, 'பார் கோடு' மூலம் தெரியவந்துள்ளது. பிடிபட்டவனிடம் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்டது என்பது உறுதியானதாக தகவல் தெரியவந்ததுள்ளது.

சுரேஷ் தப்பி ஓட்டம்
முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்தது. தப்பியோடியவர் சீராதோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவர் தானா, அல்லது வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது. பிடிபட்ட கொள்ளையன் மணிகண்டன் திருச்சியை சேர்ந்தவர்.

சிக்குவாரா சுரேஷ்
தப்பி ஓடி விட்ட சுரேஷை என்பவரை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். சுரேஷின் தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி குணா உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து தங்கள் வசம் வைத்து போலீஸார் விசாரிக்கவும் செய்தனர். இன்றைக்குள் சுரேஷும் பிடிபடுவார் என போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

சுரேஷ் கைது
அதன்படியே, இப்போது சுரேஷ் பிடிபட்டுள்ளார். இந்த சுரேஷ்தான் லலிதா ஜுவல்லரி உட்பட பல கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக இருந்த முருகனின் தம்பி என்பது தெரியவந்துள்ளது. முருகன் தயாரித்த ஒரு தெலுங்கு படத்திலும் சுரேஷ் நடித்துள்ளான். நாடு தழுவிய வங்கி ஏடிஎம் கொள்ளை முதல் லலிதா ஜுவல்லரி திருட்டு வரை முருகனுடன் சுரேஷூம் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

முருகன்
இப்போது போலீஸ் பிடியில் மணிகண்டன், சுரேஷ் இருவருமே சிக்கி உள்ளதால், விசாரணை படு வேகமாகசூடு பிடித்துள்ளது. இதனால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இவர்கள் இருவரிடம் இருந்தும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கேங் லீடர் முருகனையும் இன்று இரவுக்குள் போலீசார் கைது செய்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications