Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன இருந்தாலும் ஜோயல்ராஜுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. போஸ்ட் ஆபீஸையே சூறையாடிய பயங்கரம்!

மன்னார்குடி தபால் அலுவலகத்தை ஊழியர் ஒருவர் அடித்து நொறுக்கினார்.

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: இருந்தாலும் ஜோயல்ராஜூக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது.. நிறைய முறை கேட்டு பார்த்தும் டிரான்ஸ்பர் தரலயாம்.. அதனால போஸ்ட் ஆபீசையே அடித்து துவம்சம் செய்து சூறையாடி விட்டார்! இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்!

மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருபவர் ஜோயல்ராஜ். வயசு 29 ஆகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர். இப்போதைக்கு பொதக்குடி தபால் நிலையத்தில் டியூட்டி போட்டு உள்ளார்கள்.

சம்பவத்தன்று மதியம் பொதக்குடியில் இருந்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திற்கு ஜோயல்ராஜ் வந்தார். வரும்போதே செம டென்ஷனாகத்தான் வந்தார். வந்தவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. திடீரென ஆபீசில் இருந்த கதவு, ஜன்னல் கண்ணாடிகள், கம்ப்யூட்டர்கள், பீரோ, டேபிள், சேர் என எல்லாத்தையும் அடித்து உடைத்தார்.

அடக்க முடியல

அடக்க முடியல

கண்ணில் என்னென்ன பட்டதோ எல்லாத்தையும் நொறுக்கி தள்ளினார். அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள் எல்லாம் அதிர்ச்சியில் நின்றார்கள். ஒரு சிலர் ஓடிசென்று ஜோயலை பிடித்து கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் யாருக்கும் ஜோயல் அடங்கவே இல்லை. எத்தனை பேர் சேர்ந்தும் ஜோயலை பிடிக்கவே முடியவில்லை. அவ்வளவு ஆவேசமாக இருந்தார்.

போலீஸ் வந்தது

போலீஸ் வந்தது

அதனால் அவரை பிடிப்பதை விட்டுவிட்டு பயந்துகொண்டு எல்லோரும் ஆபீசிலிருந்து வெளியே ஓடிவந்துவிட்டனர். உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து ஜோயல்ராஜை மடக்கிப்பிடித்தனர். ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்றனர்.

விசாரணை

விசாரணை

இது சம்பந்தமாக தலைமை தபால் நிலைய அதிகாரியும் ஒரு புகார் தந்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான், 2 மாசமாக ஜோயல்ராஜ் டிரான்ஸ்பர் கேட்டு வந்ததாகவும், அது கிடைக்காத விரக்தியில் இப்படி போஸ்ட் ஆபீசையே சூறையாடி விட்டதாகவும் தெரியவந்தது.

மதுபோதை

மதுபோதை

இதுக்கு முன்னாடி கூட ஜோயல்ராஜ் இப்படிதான் 2 முறை நடந்து கொண்டாராம். ஜோயல்ராஜ் ஆவேசத்தில் அடித்து நொறுக்கிய பொருட்களின் மதிப்பு எப்படியும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல இருக்குமாம். ஆபீசையே சின்னாபின்னபடுத்தியபோது ஜோயல் போதையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கடைசியில் ஜோயல் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+