ஷாக்.. "ஸ்கூல் வேண்டாம்.. கோவில்தான் இருக்கணும்".. பள்ளிக்கூட கட்டுமானத்தை தடுத்த இந்து முன்னணி!
அதிகாரிகளுடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருவாரூர்: "இங்கே கோயில்தான் இருக்கணும்.. ஸ்கூல் கட்டக்கூடாது" என்று அதிகாரிகளுடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் செய்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை திருவாரூரில் ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர், விக்கிரபாண்டியம் அருகில் உள்ளது காாியமங்கலம் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் ஒரு தொடக்க பள்ளி இயங்கி வந்த நிலையில், கஜா புயலின்போது அது முற்றிலும் சேதமாகிவிட்டது..

கஜா புயல் அதிகமாக தாக்கிய மாவட்டங்களில் மிக முக்கியமானது திருவாரூர்தான்.. அதனால், இந்த பள்ளிக்கூடம் இடிந்துவிட்டதால், அதை தொடர்ந்து நடத்தவும் முடியாத நிலை ஏற்படவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்னொரு ஸ்கூல் கட்டலாம் என்று முடிவானது.
அதற்கு அதிகாரிகளோ,"அரசு ஒதுக்கி உள்ள இடத்தில்தானே கட்ட முடியும்?" என்று கேட்டதற்கு, "இங்க வேணாம்.. நாங்க சொல்ற இடத்துலதான் ஸ்கூல் கட்டணும்.. பக்கத்துல கோயில் இருக்கு.. இந்த ஸ்கூல் இங்கே வந்தால், அது கோயிலுக்கு இடைஞ்சலா இருக்கும்" என்று வாதிட்டனர்.

அதற்கு அதிகாரிகளோ,"அரசு ஒதுக்கி உள்ள இடத்தில்தானே கட்ட முடியும்?" என்று கேட்டதற்கு, "இங்க வேணாம்.. நாங்க சொல்ற இடத்துலதான் ஸ்கூல் கட்டிணும்.. பக்கத்துல கோயில் இருக்கு.. இந்த ஸ்கூல் இங்கே வந்தால், அது கோயிலுக்கு இடைஞ்சலா இருக்கும்" என்று வாதிட்டனர்.
இதனால் செய்வதறியாது அதிகாரிகள் திணறினர்... பிறகு ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பிறகு முடிவு செய்யலாம் என்று இரு தரப்புமே முடிவு செய்தனர். இதனால் அந்த இடமே பரபரப்பாகிவிட்டது... "ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது" என்று பாரதி சொன்னது ஏனோ நினைவுக்கு வந்து போகிறது!












Click it and Unblock the Notifications