Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ஆண்டில் இரு வைகுண்ட ஏகாதசி.. தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இரு முறை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது.

Do you know when will Vaikunta Ekadasi tickets be sold in Tirupati?

இன்னொன்ரு டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 23 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20ஆயிரம் பக்தர்களும் இலவச தரினமும் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.

Do you know when will Vaikunta Ekadasi tickets be sold in Tirupati?

இந்த 10 நாட்களும் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அந்த வகையில் ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், இலவச தரிசன டிக்கெட்டுகள் 5 லட்சமும் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்த மாதம் 29ஆம் தேதி ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ள சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+