ஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..!
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
இதையடுத்து இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி 45 நிமிடம் தாமதமாக வந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன், மருத்துவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் 11 பேர் உயிரிழந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவுப்படி 11 பேர் உயிரிழப்பு குறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாகுறையால் நாடு முழுவதும் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் தான் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 25 கொரோனா நோயாளிகள் இறந்தனர். இதேபோல் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் கடந்த மாதம் 24 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் பற்றாகுறையை தீர்க்கும் பெரும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தியில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications