திருப்பதிக்கு தர்ம தரிசனத்தில் செல்ல பிளானா? தீபாவளி நேரத்தில் பெருமாளின் உண்டியல் காணிக்கை எவ்வளவு?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 6 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் யாரையும் அடைத்து வைக்கவில்லை. எனவே திருப்பதிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்ததா என தெரியவில்லை.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருப்பதிக்கு வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மேலும் கடந்த 4 ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான கருட சேவை கடந்த 8ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த நாளில் 82,043 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். அது போல் 30,100 பேர் முடிகாணிக்கை கொடுத்தனர். அன்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ 4.10 கோடியாகும்.
நேற்று அக்டோபர் 29ஆம் தேதி ஒரு நாளில் 59,140 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 16,937 பேர் முடி காணிக்கை செலுத்தினர். நேற்று ஒரே நாளில் உண்டிகை காணிக்கை ரூ3.31 கோடி கிடைத்துள்ளது. அது போல் டைம் ஸ்லாட் மூலம் சர்வ தரிசன டிக்கெட் வாங்காமல் கூண்டில் அடைப்படாமல் லைன் பாட்டுக்கு போய் கொண்டே இருந்தது. இதில் சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் வரை ஆனது. இந்த தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது.
தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்து பிரம்மோற்சவமும் முடிந்துவிட்டதால் கூட்டம் குறைவாக இருக்கிறதா என தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் திருப்பதியில் அதிகமாக மழை பெய்தது. தற்போது குளிர் காலம் என்பதாலும் கூட்டம் குறைந்திருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications