திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு போறீங்களா? இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.. பரபரப்பு சம்பவம்! கவனம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி கோவிலுக்கு தினம் லட்சக்கணக்கில் மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகவும் பணக்கார கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Tirupati temple faces black bear attack all of a sudden: Why people should be careful?

அதிலும் திருப்பதி கோவில் தினம் தினம் கோடி கோடியாக வருமானம் ஈட்டும் கோவில் ஆகும். பக்தர்கள் அதிகம் விரும்பும், தினமும் பல வேண்டுதல்களை மேற்கொள்ளும் கோவிலாக திருப்பதி கோவில் உள்ளது.

கோவில் வருமானம்: இங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை, உண்டியல் வரவு, சிறப்பு நகை வைர காணிக்கை, வரிசை கட்டணம், நிதி உதவி மூலம் பல கோடிகளை திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானமாக பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் குறைந்திருந்த வருமானம் தற்போது மீண்டும் அங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக மக்கள் கோடி கோடியாக உண்டியலில் பணத்தை அள்ளி இங்கே கொட்டி வருகிறார்கள்.

இந்த கோவிலில் தினமும் 30 லட்சம் ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் உண்டியலில் போடப்படுகிறது. இதை தனியாக பிரித்து எண்ணுவதே மிகப்பெரிய வேலையாக உள்ளது. தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் அதிக அளவில் சில்லறை காசுகளை போடுகிறார்கள்.

அதிர்ச்சி சம்பவம்: இந்த நிலையில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் சிறுத்தை ஒன்று இதே நடைபாதையில் வந்து 4 வயது சிறுவனை தாக்கியது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை இதே பாதையில் சிறுத்தை வந்துள்ளது. கருப்பு நிற சிறுத்தை கம்பி வடத்தை தாண்டி உள்ளே நடந்து சென்றுள்ளது.

இது அங்கே இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கரடி அப்படியே வேகமாக உள்ளே நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. அந்த நேரம் பார்த்து நடை மூடப்பட்டு இருந்ததால் அங்கே மக்கள் யாரும் இல்லை. இதனால் அங்கே மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த நிலையில் அங்கே மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. கரடிகள் வருகையை தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

சில்லறை: இன்னொரு பக்கம் திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது சில்லறைகள் இருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அங்கே உண்டியலில் போடப்படும் சில்லறை காசுகள் வங்கிகளில் காசுகள் கொடுக்கப்பட்டு பணமாக மாற்றப்பட்டு கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப நாட்களில் அதிக அளவில் சில்லரைகள் வருவதால் அதை வங்கிகள் வாங்க மறுக்கின்றன. இவ்வளவு சில்லறைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று வங்கிகள் மறுத்து வருகின்றன.

வங்கிகள் ஏற்க மறுப்பதால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் திருப்பதி தேவஸ்தானம் குழப்பத்தில் உள்ளது. மூட்டை மூட்டையாக அலுவலகத்தில் சில்லறைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. தினசரி கோவில் செலவினங்கள், கோவிலுக்கு சொந்தமான பிரசாத கடைகள், தேவஸ்தான விடுதிகளில் இந்த சில்லறைகளை இனி பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+