விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம்.. திருப்பூரில் கொந்தளிக்கும் 13 மாவட்ட விவசாயிகள்
திருப்பூர்: விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கோவை ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். காத்திருப்பு போராட்டம் என்பது மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகளிடம் அனுமதி பெறாமலேயே காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதை எதிர்த்து திருப்பூர் கள்ளிபாளையம் பகுதியில் 3வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். உயர்அழுத்த மின்சார கோபுரம் மாதிரி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் விவசாயிகள் ஏறி அந்தரத்தில் தொங்குவது போன்று செய்து காண்பிக்கப்பட்டு இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
விவசாயிகள் நிலத்தின் கேட் மற்றும் பூட்டை உடைத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி உள்ளே செல்கிறார்கள். கடுமையான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை பின்பற்றப்படுகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையிலும் கூட, அதை கண்டுகொள்ளாமல் நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தொடங்கி மூன்று ஆண்டு காலம் ஆகிறது.
சாலையோரமாக தரைக்குகீழே, கேபிள் பதித்து செல்லுமாறு நாங்கள் கூறிய மாற்று யோசனையை மாவட்ட கலெக்டர்களிடம் முன்வைத்துள்ளோம். அதற்கு பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும்கூட, எந்த முடிவையும் அறிவிக்காமல் காவல்துறையும், வருவாய்த்துறையினரும் மின் கோபுரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications