மழைக்கு ஒதுங்கிய போது நடந்த சோகம்.. திருப்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒதுங்கிய போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே சமுதாய நலக்கூடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அதே பகுதியை சேர்ந்த பலர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்துள்ளனர். லேசான மழை பெய்து வந்ததால், சில பயணிகள் அந்த சமுதாய நலக்கூடத்தில் நின்றுள்ளனர்.

அப்போது திடீரென சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் வேலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த முரளி ராஜா, கவுதம், மணிகண்டன் ஆகிய பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய நலக்கூடம் பழைய கட்டிடமாக இருந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. திருப்பூர் அருகே பஸ்சுக்காக காந்திருந்த பயணிகள் 3 பேர் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications