பொது சிவில் சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பு! ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி!
திருப்பூர்: பொது சிவில் சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என ஜார்க்கண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான ஆன்லைன் கருத்துக் கேட்பு நடைபெற்று வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் அவரவர் மத நம்பக்கையின் அடிப்படையில் திருமனம், விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றை வெவ்வேறு சட்டங்கள் மூலம் கடைப்பிடிக்கின்றனர். இந்தியாவில் குற்றவியல் சட்டம், தன்டணை சட்டம் பொதுவானதாக உள்ள நிலையில் உரிமையியல் சட்டம் என்று சொல்லப்படும் சிவில் சட்டம் மட்டும் மாறுபட்டிருக்கிறது.

இந்நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பை தரக்கூடும் எனக் கூறியிருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தனது சொந்த ஊரான திருப்பூர் வந்திருந்த அவர் இதனைக் கூறினார். மேலும், இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் சரியான உரிமை கிடைப்பதற்கு பொது சிவில் சட்டம் வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
திமுகவை பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் பல்வேறு நிலைபாடுகளை எடுக்கக் கூடிய கட்சி என்றும் மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர் மதுவிலக்கை அமல்படுத்தினால் 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ அரசாங்கத்தை நடத்த கஷ்டமாக இருக்கும் என்றும் அதன் பிறகு ஜி.எஸ்.டி.வரி வருவாய் மூலம் நிலைமை சீராகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
தாம் ஆளுநராக இருக்கும் ஜார்க்கண்டில் மரங்களை மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்றும் மரங்களுக்காக பெரியளவில் பண்டிகை கொண்டாடப்படுவதை பார்த்து தாம் அசந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications