ஈரோடு மஞ்சள் மாலை.. நீலகிரி கைத்தறி துண்டு.. மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பிரதமர் மோடி ஈரோடு மாவட்டத்தில் விளையும் சிறப்பு வாய்ந்த மஞ்சளை கோர்த்து மாலை அணிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த கைத்தறி துண்டு அணிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற்றது.

Erode Manjal Garland Nilgiri Cotton Handloom Towel Grand welcome for PM Modi

இதில் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில், இதற்காக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை நிகழ்ச்சி உட்படப் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஆயிரக்கணக்கான மஞ்சளை கோர்த்து மாலையாக அணிவித்தனர். நீலகிரி மாவட்ட மக்கள் கைகளால் நெய்த கைத்தறி துண்டினை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மஞ்சளை மாலையாக அணிவித்ததாக பாஜகவினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+